எஸ்.ஐ தேர்வுக்கு தேவையான மையங்களை கண்டறிய காவல்துறை ஐ.ஜி.வித்யா ஜெயந்த் குல்கர்னி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
ADVERTISEMENT
எஸ்.ஐ தேர்வுக்கு தேவையான மையங்களை கண்டறிய, சேலம், கோவை, சென்னை, திருப்பூர், திருச்சி, மதுரை, நெல்லை மாநகர காவல் ஆணையர்களுக்கு உத்தரவு. அதேபோல் அனைத்து மாவட்ட எஸ்.பிக்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார்.
ADVERTISEMENT
அந்த சுற்றறிக்கையில், 100 பேர் எழுதும் வகையில் தேர்வு மையங்கள் அமைக்க பள்ளி, கல்லூரிகளை கண்டறிய உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 969 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு ஜனவரி 11 ஆம் தேதி துறைசார்ந்த பிரிவினருக்கும், ஜனவரி 12 ஆம் தேதியில் பொதுப்பிரிவினருக்கும் எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது.
Show comments