மத்திய பட்ஜெட்டில் நிறைய சலுகைகள் இருக்கிறது. பிரதமர் நரேந்திரமோடி ஒரு சாமானியன். சாமானியர்கள் போடுகிற பட்ஜெட் சாமானியர்களுக்கு சாதகமாகத் தான் இருக்கும். இது முதலாளித்துவ பட்ஜெட் கிடையாது. ஏழைகளுக்கான பட்ஜெட். தொலைநோக்கு திட்டத்தோடு போடப்பட்டிருக்கிறது இந்த பட்ஜெட். இந்தியா ஒரு வல்லரசு நாடாக, உயர்ந்த நாடாக ஆவதற்கு அடித்தளமிட்டிருக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி. டிடிவி தினகரன் மிகவும் கவலையில் இருக்கிறார், உளறிக் கொண்டிருக்கிறார். ஏனென்றால், அவர் தனிமையில் இருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் அவருக்கு கார் ஓட்டும் டிரைவர் கூட வெளியேறி வந்திருவாரு. அவர் ஒத்தையில் தான் இருக்கணும். அவர் ஒரு தியாக மனப்பான்மை உள்ள தலைவராக உருவாகவில்லை.
தமிழனின் உணர்வுகளை அவர் பிரதிபலித்தார். அதற்காக, அவருக்குத் தண்டனை என்றால், தமிழகத்துக்கு இது கஷ்டமானது தான். உலக அளவில் தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே குரல் கொடுக்கக்கூடிய ஒரே தலைவர் அவர் தான். நம் தொகுதியைச் சேர்ந்தவர் வைகோ. தனிப்பட்ட முறையில் எனக்கு இந்த தண்டனை மிகவும் வருத்தமளிக்கிறது. அதிமுக- பாஜக கூட்டணியினால் ஏற்பட்ட தோல்வி கிடையாது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால், பல இடங்களில் பலமும் பெற்றிருக்கிறோம். பொய்யான வாக்குறுதிகளால் திமுக வெற்றி பெற்றிருக்கிறது.” என்று தனது பாணியில் யதார்த்தமாக பேட்டி அளித்தார்.