ADVERTISEMENT

தமிழகத்தில் நாளை மறுநாள் தனியார் பால் விநியோகம் இல்லை!

11:51 AM Mar 20, 2020 | santhoshb@nakk…

மார்ச் 22- ஆம் தேதி காலை 07.00 மணி முதல் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டதாலும், காலை 07.00 மணிக்கு முன்பாக அனைத்து பகுதிகளுக்கும் பால் விநியோகம் செய்ய இயலாது என்பதாலும், தமிழகத்தில் நாளை மறுநாள் (22/03/2020) மட்டும் தனியார் பால் விநியோகம் செய்யப்படமாட்டாது என பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் நாளை கூடுதல் நேரம் பால் விநியோகம் நடைபெறும் என்றும், தேவையான அளவு பாலை நாளையே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ஏற்கனவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் நாளை மறுநாள் (22/03/2020) செயல்படாது என அனைத்து வியாபாரிகள் சங்கம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT