சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளிக் காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கரோனா தடுப்புப்பணிகள், வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீடு, ஊரகப் பகுதிகளில் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்டவைகள் குறித்து ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.