ADVERTISEMENT

உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி அறிவிப்பு!

04:50 PM Dec 07, 2019 | santhoshb@nakk…

தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதியை அறிவித்தது மாநில தேர்தல் ஆணையம்.

ADVERTISEMENT

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக உட்பட 12 தரப்பினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், "தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற இடத்திற்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் என்றும், விடுபட்ட 9 மாவட்டங்களை 4 மாதங்களில் மறுவரையறை செய்து தேர்தலை நடத்தவேண்டும்" என்றும் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT


அதை தொடர்ந்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. மேலும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நேற்று (06.12.2019) மாநில தேர்தல் ஆணையர், தலைமை செயலாளர், தேர்தல் அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை செய்தார்.


இந்நிலையில் தமிழக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று (07.12.2019) மாலை 04.30 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இதில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நெல்லை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது


வேட்பு மனுத்தாக்கல் டிசம்பர் 9- ஆம் தேதி முதல் தொடங்கிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய டிசம்பர் 16- ஆம் தேதி கடைசி நாள் ஆகும். வேட்பு மனு மீதான பரிசீலனை டிசம்பர் 17- ஆம் தேதி நடைபெறும் என்றும், வேட்பு மனுக்களை திரும்ப பெற டிசம்பர் 19- ஆம் தேதி கடைசி நாளாகும் என்று அறிவித்துள்ளார். தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு காலை 07.00 மணிக்கு தொடங்கி மாலை 05.00 மணிக்கு நிறைவடையும். பதிவான வாக்குகள் 02.01.2020 அன்று எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவித்தார்.


உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பையடுத்து 9 மாவட்டங்களை தவிர 27 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறை தொடரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஊராட்சி மன்றத் தலைவர், மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவரை தேர்ந்தெடுக்க ஜனவரி 11 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.


இருப்பினும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இதற்கான தேதி விரைவில் வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT