ADVERTISEMENT

தலைமை குற்றவியல் வழக்கறிஞராக ஹசன் முகமது ஜின்னா நியமனம்!

08:49 PM Jun 04, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக அரசின் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞராக ஹசன் முகமது ஜின்னாவை நியமித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.

அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் குறித்து பார்ப்போம்!

1977- ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அத்திக்கடை கிராமத்தில் பிறந்த ஹசன் முகமது ஜின்னா, 1996- ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். கண்ணகி சிலை இடிப்பு வழக்கு, கல்லூரி மாணவி ஷரிகாஷா வழக்கில் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகியுள்ளார். யுனெஸ்கோவின் ஆசிய- பசுபிக் மண்டல மையத்தின் ஆலோசகர் என பன்முகத் திறமைக் கொண்டவர் ஆவார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஒப்புதல் நடைமுறைக்குப் பின் தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக ஹசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT