ADVERTISEMENT
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக துணை முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
ADVERTISEMENT
இந்த நிலையில் எம்.ஜி.எம். மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். நேற்று மாலை வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்று முழு உடல் பரிசோதனை நடந்தது. சிகிச்சை முடிந்து இன்று மாலை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்" என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே மருத்துவமனைக்குச் சென்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி விசாரித்தார். அதன் தொடர்ச்சியாக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன், துணை முதல்வரிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார். அப்போது துணை முதல்வர் பூரண நலம்பெற இறைவனைப் பிரார்த்திப்பதாக ஓ.பி.எஸ்.ஸிடம் தமிழிசை கூறினார்.
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT