தமிழகத்தில் கரோனாவால் மேலும் 374 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29,280 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 244 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 130 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,62,073 ஆக உள்ளது. கரோனாவிலிருந்து மேலும் 27,463 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 21,48,352 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்." இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 22 ஆவது நாளாக ஒருநாள் கரோனா மொத்த பாதிப்பு குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.