ADVERTISEMENT

செப். 29 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

10:17 AM Sep 25, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் செப்டம்பர் 29- ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறார் தமிழக முதல்வர் பழனிசாமி.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது மேலும் தளர்வுகள் அளிக்கலாமா? என்பது குறித்தும் முதல்வர் ஆலோசிக்கிறார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் காணொளி மூலம் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலாளர் சண்முகம், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

செப்டம்பர் 29- ஆம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் ஆலோசிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT