இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக நடைப்பெறுகிறது. ஆனால் தமிழகத்தில் இரண்டாம் கட்டத்தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைப்பெறுகிறது. இந்நிலையில் இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் விடுமுறை நாட்கள் மற்றும் சனிக்கிழமை , ஞாயிற்றுக்கிழமை மனு பெறப்படாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் , 18 சட்டமன்ற தொ இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து காலை 10.00 மணி முதல் மாலை 3.00 வரை வேட்பாளர்கள் தங்களது தேர்தல் நடத்தும் மாவட்ட அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம் எனவும் , வேட்பு மனுவுடன் வைப்பு தொகையை செலுத்த வேண்டும்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
பி.சந்தோஷ் , சேலம்.
Show comments