ADVERTISEMENT
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (12.01.2023) காலை 09.00 மணி அளவில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற "அயலகத் தமிழர் தினம் 2023" விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அயலகத் தமிழர்களுக்கான புதிய நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்து விழாப் பேருரையாற்றினார். இந்நிகழ்வில் துறையின் அமைச்சர் செஞ்சி மஸ்தான், உலகத் தமிழ்ச் சங்க பிரதிநிதிகள், பல்வேறு நாடுகளில் முக்கிய பொறுப்புகளில் உள்ள சாதனைத் தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments