சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றஉறுப்பினரும்திமுகவின் இளைஞரணிசெயலாளருமானஉதயநிதி ஸ்டாலின் இன்று காலை ஆளுநர் மாளிகையில் தமிழகத்தின் 35ஆவது அமைச்சராகப்பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பணி சிறக்க, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ்தமிழர்கள் நலன்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று மதியம் அண்ணாசாலையில் உள்ள தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்தார். மேலும் அங்கிருந்தவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.