ADVERTISEMENT

முன்னாள் எம்.பி. மஸ்தான் உயிரிழப்பில் திடீர் திருப்பம்; 5 பேர் கைது

12:16 PM Dec 30, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவரும், திமுக முன்னாள் எம்.பி.யுமான மஸ்தான் கொலை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த முன்னாள் திமுக எம்.பி.யும், மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவருமான மஸ்தான் கடந்த 22 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற பொழுது, சென்னை கூடுவாஞ்சேரி அருகே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கூடுவாஞ்சேரி போலீசார் இந்த வழக்கை சந்தேக மரணம் என மாற்றி விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்தச் சம்பவத்தில் திடீர் திருப்பமாக, மஸ்தானின் உறவினர்கள் ஐந்து பேர் சேர்ந்து அவரை கொலை செய்துள்ளது இன்று காலையில் முதற்கட்ட தகவலாகத் தெரியவந்துள்ளது. தற்பொழுது 5 பேரும் கைது செய்யப்பட்டு கொலை தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT