ADVERTISEMENT

தாயை கத்தியால் குத்தி கொலை செய்த மகன்..!

10:28 AM Apr 14, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் கிராமத்தில் தாயைக் கத்தியால் குத்திக் கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்துள்ளனர். சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (45). இவர் கவரிங் பட்டறை தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா (35). இவர்கள் இருவருக்கும் 15 வயது நிரம்பிய ஒரு ஆண் மகன் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் 10 வகுப்பு படித்து வருகிறார்.

சங்கீதாவுக்கு பலருடன் கூடா நட்பு இருந்துள்ளது. இதை பாலமுருகன், அவரது மகன் ஆகியோர் கண்டித்துள்ளனர். சங்கீதாவின் கூடா நட்பால் ஊரிலும் தகராறு நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சண்டைப் போட்டதால் சங்கீதா அவரது தாய்வீடான சிதம்பரம் அருகே உள்ள கொத்தங்குடி கிராமத்துக்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில், சங்கீதா செவ்வாய்கிழமை (13.02.2021) மதியம் கணவர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த அவரது மகன் அவரை ஆபாசமாக திட்டி, கையில் வைத்திருந்த கத்தியால் அவரது வயிற்றில் சரமாறியாக குத்தியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த சங்கீதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, அவரது மகனை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது தந்தை பாலமுருகனுக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அதனால் அவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். தாயை மகனே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT