Skip to main content

“மழைக்காலங்களில் விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்”-எம்.எல்.ஏ. சின்னதுரை கோரிக்கை!

Published on 29/01/2022 | Edited on 29/01/2022

 

Agricultural wages should be provided to workers during the rainy season

 

சிதம்பரத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார்.  இக்கூட்டத்தில் விதொச மாநில செயலாளரும் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினருமான  சின்னதுரை, மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட பொருளாளர் செல்லையா, மாவட்ட துணைத்தலைவர்கள் ஜெயக்குமார், ஜோதி, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 100 நாள் வேலைத்திட்டத்தில் கிராமப்புறங்களில் 20 நபர்களுக்கு மட்டுமே காலையில் 8.30 மணிக்கு  விவசாயத் தொழிலாளர்கள் வேலைக்கு வந்து பயோ மெட்ரிக் முறையில் 4-30 மணிவரை வேலை செய்ய வேண்டும் எனக் கட்டாய நிர்ப்பந்தத்தை உடனடியாக மத்திய மாநில அரசுகள் மாற்ற வேண்டும். 

 

இந்நிலையில் 31-ந்தேதி விவசாயிகள் துரோக நாளாகக் கடைபிடித்து விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் விதொச பெரும் திரளாகக் கலந்து கொள்ள உள்ளது. அதில் நிலம், மனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 6-ஆம் தேதி வட்டத் தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

 

இக்கூட்டத்தில் மாவட்ட புதிய தலைவராக ரமேஷ்பாபு, பொருளாளராகக் கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவர்களாக ஜெயக்குமார், பன்னீர், வெற்றி வீரன் துணை செயலாளர்களாக நெடுஞ்சேரலாதன், ஜோதி மணி உள்ளிட்ட 27 பேர் கொண்ட மாவட்ட குழுத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

முன்னதாகச் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ. சின்னதுரை பேசுகையில், ஒன்றிய அரசு 100- நாள் வேலைத் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியைக் கட்டுமான பணிக்குப் பெருவாரியாக ஒதுக்கப்படுவது என்பது அதிகரித்து வருகிறது. இது விவசாயத் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கவும், ஊராட்சியில் உள்ள நீர்நிலைகள்,  பொதுச்சொத்துக்களை பாதுகாக்கவும் ஒதுக்கப்படுவது. எனவே இதனை மாற்று பணிக்குப் பயன்படுத்தக் கூடாது.  கடலூர் மாவட்டத்தில் 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குக் கடந்த 3  மாதமாகக் கூலி வழங்காமல் உள்ளனர்.

 

கூலி வழங்குவதில் சாதிவாரியாகக் கூலியை விடுவிப்பது,  சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது உள்ளிட்ட நடைமுறைகள் உள்ளது.  இதனை ஒன்றிய அரசு மாற்றிக் கொள்கிறோம் என்று கூறிய பிறகும்  சாதிவாரியாகக் கணக்கெடுப்பு என்பதை தொடர்ந்து  நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். இதனை விவசாய தொழிலாளர் சங்க தமிழ் மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த நடைமுறையைத் தமிழகத்தில் அகற்றிக் கொள்ள வேண்டும்.

 

தமிழகத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை கிராமப்புறத்தில் உள்ள மக்கள் வீடு கட்ட முடியாமல் அவதி அடைந்து வருகிறார்கள்.  அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  விவசாய தொழிலாளர் சங்கத்தின் போராட்டத்தின் விளைவாக நகர்ப்புற ஏழைகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கத் தமிழக முதல்வர்  மாவட்டத்தில் ஒரு நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நகர்புற வேலைவாய்ப்பை அறிவித்தார்.  அதில் முறையான கணக்கெடுப்பு  நடைபெறவில்லை.

 

ஏழை, எளிய மக்களும் விளிம்புநிலை மக்களும் பாதிப்படையாத வகையில் உரிய கணக்கெடுப்பு நடத்தி நகர்ப்புற வேலைகளை ஏழைமக்களுக்கு வழங்க வேண்டும். மழைக்காலங்களில் விவசாயிகளுக்கும் கட்டுமான தொழிலாளர்களுக்கும்  நிவாரணம் கிடைக்கிறது.  விவசாயத்தின் முதுகெலும்பாக உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு எந்த நிவாரணம் கிடைப்பதில்லை. அவர்கள் பேரிடர் காலங்களிலும் மழைக் காலங்களிலும் எந்த வேலையும் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து முடங்கியுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.