Skip to main content

ராணுவ வீரர் பழனியின் உடல் மதுரை வந்தடைந்தது...

Published on 17/06/2020 | Edited on 17/06/2020
 Soldier's pazhani arrived in Madurai

 

இந்திய-சீன எல்லையான லடாக் பகுதியில், இந்திய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சீன ராணுவத்தினர் முகாமிட்டு வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே சமீப காலமாகப் பதட்டமான சூழல் நிலவிவருகிறது. 

லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தினருக்கும், சீன ராணுவத்தினருக்கும் மோதல் நடந்துள்ளதாகத் தகவல் வெளியானது. இதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த ஒரு அதிகாரி மற்றும் இரண்டு வீரர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ள நிலையில், அதில் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி என்ற ராணுவ வீரர் வீரமரணமடைந்தார். இந்நிலையில் ராணுவ வீரர் பழனியின் உடல் சிறப்பு விமானத்தின் மூலம் தற்பொழுது மதுரை விமான நிலையம்  வந்தடைந்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்