ADVERTISEMENT

சிவசந்திரன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்!

05:22 PM Feb 16, 2019 | kalaimohan

ADVERTISEMENT

தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர் சிவசந்திரன் உடல் முழு அரசு மரியாதை உடன் அடக்கம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவப் படை வீரர் அரியலூரைச் சேர்ந்த சிவச்சந்திரன் உடல் இன்று காலை 11.45 மணிக்கு திருச்சிக்கு வந்தது. திருச்சி விமான நிலையத்தில் சிவச்சந்திரன் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் வீரர் சிவச்சந்திரனின் உடல் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் கார்குடியில் அடக்கம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT