ADVERTISEMENT

சிவச்சந்திரன் குடும்பத்தின் சோக பின்னணி

01:26 PM Feb 16, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த சின்னையன்- சிங்காரவல்லி தம்பதியின் இரண்டாவது மகன் சிவச்சந்திரன். இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்துள்ளார்.

ADVERTISEMENT

2014- ஆம் ஆண்டு இவருக்கும் காந்திமதி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இவருக்கு சிவமுனியன் என்ற இரண்டு வயது ஆண்மகன் உள்ளார். தற்பொழுது காந்திமதி 3 மாத கர்ப்பமாக உள்ளார்.

கடந்த ஜனவரி 4-ஆம் தேதி விடுமுறைக்கு வந்த சிவசந்திரன் ஐயப்பன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வந்துள்ளார் . மீண்டும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று வந்துவிட்டு பிப்ரவரி 7ம் தேதி பணிக்கு திரும்பி சென்றுள்ளார்.

பணியில் சேர்ந்தவுடன் தனது மனைவி காந்திமதிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனைவரையும் விசாரித்ததோடு, தனது மகனை நன்கு பார்த்துக் கொள்ளும்படி கூறி தான் பழைய இடத்திற்கே மீண்டும் பணிக்கு செல்வதாகவும், அந்த இடத்திற்கு சென்ற பிறகு தொலைபேசியில் தொடர்பு கொள்வதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

இந்நிலையில் காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் சிவச்சந்திரன் உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது குடும்பத்திற்கு மிகவும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரு வருடங்களுக்கு முன்பு சென்னையில் மூத்த மகன் கோயம்பேடு மார்க்கெட்டில் மின்சார கசிவினால் தாக்கப்பட்டு உயிரிழந்த சூழலில், 2-வது மகனும் தற்பொழுது உயிரிழந்துள்ளது அக்குடும்பத்திற்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT