ADVERTISEMENT

ஒவ்வொரு வீடாக கதவை திறக்க முயன்ற மர்மநபர்... சிசிடிவி காட்சியால் அதிர்ச்சி!!

09:16 PM Jun 30, 2019 | kalaimohan

சேலத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் இரவு நேரங்களில் உலா வரும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மாடி மீது ஏறி குதித்து திருட முயற்சி செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலம் அம்மாபேட்டை பெரிய கிணறு தெருவில் இருக்கும் வீடுகளில் நுழையும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஒவ்வொரு வீடாக கதவை திறக்க முயன்று பின்பு மாடி வீட்டின் மீது ஏறுவதும்,சுற்றித்திரிவதுமாக அலைந்து சுமார் 10 நிமிடங்கள் கழித்து அங்கிருந்து தப்பிச் செல்லும் காட்சிகள் சிசிடிவில் பதிவாகியுள்ளது.


இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை போலீஸார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அடையாளம் தெரியாத நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அனைத்து வீடுகளின் கதவுகளையும் திறக்க முயற்சித்து பின்னர் தப்பிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT