சென்னையை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலில் 4 வயது சிறுமி குளியலறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் தற்போது அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டது ஊர்ஜிதமாகிய நிலையில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் அந்தோணியார் தெருவைச் சேர்ந்தவர் தனியார் தொழிற்சாலை ஊழியரரான ராஜேந்திரன். இவரது நான்கு வயது மகள் சன்மதி வீட்டின் குளியலறையில் சடலமாக மீட்கப்பட்டார். மாலையில் இருந்தே சன்மதியை காணவில்லை என உறவினர்களும், பெற்றோர்களும் தேடிவந்த நிலையில் வீட்டில் குளியலறையில் 4 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதுதொடர்பாக திருமுல்லைவாயில் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்ததை அடுத்து சிறுமியின் உடலை மீட்ட காவல்துறையினர் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்த நிலையில் சிறுமியின் வீட்டின் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் அந்த குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து குளியல் அறையில் கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக திருமுல்லைவாயில் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்ததை அடுத்து சிறுமியின் உடலை மீட்ட காவல்துறையினர் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்த நிலையில் சிறுமியின் வீட்டின் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் அந்த குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து குளியல் அறையில் கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
Show comments