ADVERTISEMENT

கஞ்சா போதையில் 65 வயது மூதாட்டிக்கு பாலியல் அத்துமீறல்; 17 வயது சிறுவர்களை தேடும் போலீசார்

08:03 PM Mar 05, 2019 | kalaimohan

சென்னை வியாசர்பாடியில் கஞ்சா போதையில் சிறுவர்கள் மூன்று பேர் சேர்ந்து கத்திமுனையில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளன. அங்கு வீடுகள் இல்லாத குடும்பங்கள் சிலர் குடிசையில் வசித்து வருகின்றனர். குடிசைப்பகுதியில் 65 வயதான மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று கஞ்சா போதையில் 17 வயதுடைய சிறுவர்கள் 3 பேர் அந்தக் குடிசைக்குள் புகுந்துள்ளனர். அந்த குடிசையிலிருந்து சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது கத்தியுடன் வெளியே சென்ற அந்த சிறுவர்கள் அந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சுமதி என்பவர் கூறுகையில்,

ஒரு வயதான மூதாட்டியை 15 வயது பையன் வீட்டுக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை சொல்வதற்கு அந்த மூதாட்டி பயந்துகொண்டு சொன்னார். எங்களுக்கே கேட்க அதிர்ச்சியாகவும், கஷ்டமாகவும் இருந்தது. பெண்பிள்ளைகளை வைத்துக்கொண்டு நாங்கள் இங்கே வெளியே வரவே பயமாக இருக்கிறது என கூறினார்.

இந்நிலையில் அந்த மூன்று பேரில் ஒரு சிறுவன் தற்போது பிடிபட்டுள்ள நிலையில் மற்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மூதாட்டி வசித்து வரும் குடிசைக்கு அருகே சென்னை மாநகராட்சி கட்டிடம் துறையின் சமூக நலக்கூடம் உள்ளது. பாதுகாவலர்களோ போலீசார் கண்காணிப்போ இல்லாத இந்த சமூக நலக்கூடம் சமூக விரோதிகளின் கூடாரமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மது, கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் பரிமாறிக் கொள்ளும் இடமாக இந்த சமூக நலக்கூடம் இருப்பதாகவும், அங்கு கஞ்சா மற்றும் போதை ஏற்றிக் கொள்ளும் சிறுவர்கள் குடிசைப்பகுதியில் வந்து அச்சுறுத்துவதாகவும் அப்பகுதி பெண்கள் முறையிட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT