Skip to main content

ரெட்டேரியில் தொடர் பிறப்புறுப்பு அறுப்பு சம்பவம்... ஓரினசேர்க்கை சைக்கோ கைது!!

Published on 12/06/2019 | Edited on 12/06/2019

சென்னை ரெட்டேரி பாலத்திற்கு கீழே ஆண்களின் பிறப்பு உறுப்புகளை அறுத்து கொடூர செயலில் ஈடுபட்ட சைக்கோ கொலைகாரன் போலீசாரிடம் சிக்கியுள்ளான்.  ஓரினச்சேர்க்கைக்கு சரியாக ஒத்துழைக்காத காரணத்தால் இவ்வாறு செய்ததாக சைக்கோ கொலைகாரன் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தரப்பு தெரிவித்துள்ளது.

 

police

 

சென்னை கொளத்தூரை சேர்ந்த அஸ்லம் பாஷா என்பவர் கடந்த மாதம் 25ம் தேதியன்று சென்னை ரெட்டேரி பாலத்திற்கு கீழ் பிறப்பு உறுப்பு அறுக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  அஸ்லமிடம்  மாதவரம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது குடும்பப் பிரச்சனை காரணமாக தன்னுடைய பிறப்புறுப்பை தானே அறுத்துக் கொண்டதாக வாக்குமூலம் கூறினார். இதனால் தற்கொலை முயற்சி என அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விடவே அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் இது தற்கொலை சம்பவம் அல்ல இது ஒரு கொலை சம்பவம் எனவே இந்த மரணம் சந்தேக மரணம் என வழக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

 

police

 

இந்த விசாரணை ஒருபுறம் சென்று கொண்டிருக்க அதே பாலத்தின் கீழ்பகுதியில் கடந்த 2ம் தேதி அன்று நாராயண பெருமாள் என்பவர் பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு  துடித்துக் கொண்டிருந்தார். அவரும் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தன்னுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டிருந்த ஒருவன் தனது பிறப்புறுப்பை அறுத்துவிட்டான் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஒருவேளை அதே இடத்தில் இதேபோல் நடந்த  பிறப்புறுப்பு அறுக்கப்பட்ட சம்பவத்தில் அஸ்லம் பாஷா இறந்ததும் இதேபோல் தானோ என சந்தேகித்த போலீசார் இதுதொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட அந்த சைக்கோ கொலைகாரனை தீவிரமாக தேடி வந்தனர். இதற்காக 4 தனிப்படை அமைக்கப்பட்டது.

 

police

 

ரெட்டேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரிந்தவனின் வீடியோ பதிவு நாராயண பெருமாளிடம் காண்பிக்கப்பட்டது. தனது பிறப்பு உறுப்பை அறுத்தது அவன்தான் என்பதை நாராயண பெருமாள் உறுதி செய்யவே அந்த நபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டினர். 

 

இதையடுத்து அந்தநபர் வில்லிவாக்கத்தில் மீன் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை வடக்கு மண்டலம் கூடுதல் ஆணையர் தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில்,

 

police

 

சென்னை ரெட்டேரி பாலத்தின் பக்கத்தில் அஸ்லம் பாஷா என்பவர் பிறப்புறுப்பு  அறுக்கப்பட்டு சீரியசான கண்டிஷனரில் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனார். இந்த மாதம் இரண்டாம் தேதி மீண்டும் ஒருத்தர் நாராயண பெருமாள் என்பவர் அதேபோல் மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு ஹாஸ்ப்பிட்டலில்  இருந்தாரு அவரும் முதலில் விசாரிக்கும் பொழுது இது தெரியாமல் பட்டது நானே செய்து கொண்டேன் என்று வெளியே செல்லக் கூச்சப்பட்டுக்கொண்டு ரொம்ப கஷ்டப்பட்டார். காவல்துறை விசாரிக்கும் பொழுது ஒருவன் ஓரினச் சேர்க்கையின் போது கட் பண்ணிவிட்டான்  என்று சொன்னாரு. அதன் பிறகு அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் போன்றவற்றை ஆய்வு செய்ததில் ஒரே நபர்தான் இந்த இரண்டு வழக்குகளும் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது என தெரிவித்தார்.

 

police

 

இதைத்தொடர்ந்து அந்த சைக்கோ கொலைகாரனை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவன் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்த முனியசாமி என்பதும், அவனுக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணையில் குடிபோதையில் இருந்த அஸ்லம் பாஷா மற்றும் நாராயண பெருமாள் ஆகிய இருவருடனும் ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தி ஈடுபட்டதாகவும், சரியாக ஒத்துழைக்காத காரணத்தால் அவர்களின் பிறப்புறுப்புகளை அறுத்துவிட்டதாகவும் வாக்குமூலம் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

police

 

முதல் நபரின் பிறப்புறுப்பை  பிளேடாலும், இரண்டாவது சம்பவத்தின்போது நாராயணப் பெருமாளின் பிறப்புறுப்பை உடைந்த கண்ணாடி துண்டினால் அறுத்ததாகவும் முனியசாமி ஒப்புக்கொண்டுள்ளான். டாஸ்மாக்கில் மது அருந்துவோர் மற்றும் இருசக்கர வாகனத்தில் தனக்கு லிப்ட்  கொடுப்பவர்களை ஓரினச்சேர்க்கைக்கு அழைப்பதை வாடிக்கையாக வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. அவனிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மறைந்த முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உடலுக்கு முதல்வர் அஞ்சலி! 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
CM Tributes to Late Former Minister Indira Kumari

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்து வந்தவர் இந்திரகுமாரி (வயது 73). அப்போது தொட்டில் குழந்தை திட்டம் உருவாக இவர் முக்கிய காரணமாக விளங்கினார். இவருக்கு வழக்கறிஞர் பாபு என்ற கணவரும், லேகா சந்திரசேகர் என்ற மகளும் உள்ளனர். அதிமுகவில் இருந்த இந்திராகுமாரி அதன் பின்பு, கடந்த 2006 ஆம் ஆண்டில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

திமுகவில் இவருக்கு இலக்கிய அணி மாநிலத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. இத்தகைய சூழலில் இந்திரகுமாரி, சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நேற்று (15.04.2024) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து இந்திரகுமாரியின் உடல் அஞ்சலிக்காக அடையாற்றில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திமுக நிர்வாகிகள் பலரும் வந்து அவருக்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதே சமயம் இந்திரகுமாரி மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “திமுக இலக்கிய அணித் தலைவர் புலவர் இந்திரகுமாரி மறைந்த துயரச் செய்தி வந்து சோகத்தில் ஆழ்த்தியது. நெடிய அரசியல் அனுபவம் கொண்டவரான புலவர் இந்திரகுமாரி தமிழக அமைச்சரவையில் இடம்பெற்று மக்களுக்குப் பணியாற்றியவர். தீராத் தமிழ்ப் பற்றுடன் இலக்கிய வெளியில் இயங்கியவர். அவரது மறைவு திமுகவிற்கும், இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும். புலவர் இந்திரகுமாரியை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். 

CM Tributes to Late Former Minister Indira Kumari

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மறைந்த இந்திரகுமாரியின் இல்லத்திற்கு இன்று (16.4.2024) நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.