Skip to main content

“அமலாக்கத்துறை அதிகாரிகளை போலிஸ் என்று வரையறை செய்யவில்லை..” - என்.ஆர்.இளங்கோ

Published on 22/06/2023 | Edited on 22/06/2023

 

senthilbalaji case advocate elango press meet

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

 

இதற்கு முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் உள்ளதால், அவரை விடுவிக்கக்கோரி அவரது மனைவி மேகலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த நீதிமன்றம் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி வழங்கியது. அதே சமயம் அமைச்சர் நீதிமன்றக் காவலில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டது. அமலாக்கத்துறையினர் தங்கள் மருத்துவக் குழுவினரை கொண்டு பரிசோதனை செய்து கொள்ளவும் அனுமதி வழங்கியது. செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

 

இந்நிலையில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவிற்கும் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தூஷார் மேத்தாவுக்கும் இடையே சுமார் 2 மணி நேரமாக காரசார விவாதம் நடைபெற்றது. இதையடுத்து பதில் வாதத்திற்கு அவகாசம் அளிக்க அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா கோரிக்கை வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை வரும் 27 ஆம் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

 

அதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த ஆட்கொணர்வு மனு நிலைக்கத்தக்கதா அல்லது ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்ற விவாதம் முன்வைக்கப்பட்டது. ஏனென்றால், அமலாக்கத்துறை நிலைக்கத்தக்கது அல்ல என்றும், விசாரணைக்கே எடுத்துக்கொள்ள கூடாது என்ற வாதத்தை நேற்று உச்சநீதிமன்றத்தில் முன்வைத்தது. அப்போது உச்சநீதிமன்றம் இடு குறித்து உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என்று கூறியதால் ஆட்கொணர்வு மனு நிலைக்கத்தக்கதா என்ற வாதத்தை முன்வைத்தோம். இதுவரை உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்புகளில் ஏதாவது நீதிமன்றத்தால் ஒருவர் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு இருந்தால் அந்த உத்தரவு சட்ட விரோதமாகவோ அல்லது இயந்திரத்தனமாகவோ வழங்கப்பட்டு இருந்தால் ஆட்கொணர்வு மனு நிலைக்கத்தக்கது என்ற தீர்ப்பை முன்வைத்தோம்.

 

இரண்டாவதாக மருத்துவமனையில் இருக்கும் காலத்தில் செந்தில் பாலாஜியை போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போது இந்த நாட்களையும் நீதிமன்றக் காவலில் உள்ள நாட்களாக கருதி கழித்துக்கொள்ள வேண்டுமா, இல்லையா என்ற வாதம் வந்தது. அதற்கு உச்சநீதிமன்ற தீர்ப்புகளை காட்டி எந்த சூழ்நிலைகளிலும் 15 நாட்களை மீறி போலிஸ் காவல் தர முடியாது என்ற வாதத்தை முன்வைத்தோம். அதற்கும் மேலாக இந்திய சுங்க சட்டம், வருமான வரி சட்டம், சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் ஆகிய வழக்குகளை விசாரிக்கக் கூடிய அதிகாரிகளுக்கு போலிஸ் அதிகாரி என்ற அதிகாரத்தை கொடுத்துள்ளது.

 

ஆனால் பாராளுமன்றம் பண மோசடி தடுப்பு சட்டத்தை உருவாக்கும்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் போலிஸ் அதிகாரிகள் என்று வரையறை செய்யவில்லை. அந்த காரணத்தின் அடிப்படையில் இந்தியாவில் அமலாக்கத்துறை இயக்குனரக அதிகாரிகளுக்கு புலன் விசாரணை செய்யும் போது போலிஸ் காவலில் எடுக்க அதிகாரமே இல்லை என்ற வாதத்தை எடுத்து வைத்திருக்கிறோம். இந்த அனைத்து வாதங்களுக்கும் இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் தூஷார் மேத்தா வரும் செவ்வாய்க்கிழமை பதிலளிப்பார். அதன் பிறகு தீர்ப்புக்கு ஒத்தி வைக்கப்படும்” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இதை செய்ய சொன்னால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்” - வாட்ஸ் அப் எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 WhatsApp warning May have to leave India

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் செயலி தான் வாட்ஸ் அப். இந்த செயலி மூலம், தகவல்களை பரிமாறவும், இணைய சேவை மூலம் எந்தவித கட்டணமுமின்றி வீடியோ கால், ஆடியோ கால் போன்றவற்றை பயன்படுத்தவும் முடியும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் என அனைத்து விதமான பரிமாற்றங்களையும் இந்த செயலி மூலம் அனுப்பக்கூடிய வசதிகள் உண்டு. இந்த செயலியை உபயோகிக்காத மக்கள் மிகவும் சொற்பமாக தான் இருக்க முடியும் என்றுதான் கூற வேண்டும். 

இதற்கிடையில் வாட்ஸ் அப் பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த செயலி மூலம் பயனர் ஒருவருக்கு அனுப்பும் செய்திகளை மூன்றாம் நபர்கள் பார்க்க முடியாதவாறு எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் ( End to End Encryption) முறையை கொண்டு வந்தது. இதனைப் பயன்படுத்தி பயனர்கள், தாங்கள் அனுப்பும் செய்திகளை பாதுகாத்து கொள்ளலாம். இதனால், தனிப்பட்ட ஒருவரின் செய்திகள் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அந்த சட்டத்தில் கூறியதாவது, போலி செய்திகளையும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தவறான செய்தி பகிர்வுகளை கண்டறிய வேண்டும். இதனால், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செய்தி பகிர்வு செயலி வாயிலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும் சேமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனை எதிர்த்து வாட்ஸ் அப், பேஸ் புக் ஆகிய நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று (25-04-24) டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘வாட்ஸ் அப் எண்டு டு எண்ட் என்கிரிப்ஷன் காரணமாக போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், இது போலி செய்திகளால் நாட்டில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைத்துவிடும்’ என வாதிட்டார். 

இதனையடுத்து, வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் காரியா, “இந்த சட்டத்தை அமல்படுத்துவதால் நாங்கள் ஒரு முழுமையான சங்கிலியை வைத்திருக்க வேண்டும். மேலும், மில்லியன் கணக்கான செய்திகளை பல ஆண்டுகளாக சேமிக்க வேண்டும் நிலை உருவாகும். உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் இல்லை.  இது போன்ற சட்டங்களை கொண்டு வந்து  என்கிரிப்ஷனை எடுக்க சொன்னால் வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு செல்ல வேண்டி இருக்கும்” எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கை ஒத்திவைத்தனர். 

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.