ADVERTISEMENT

ஹோட்டலில் மனைவியை கிண்டல் செய்தவருக்கு அரிவாள் வெட்டு... சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி!

08:14 PM May 09, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நெல்லையில் ஹோட்டலில் மனைவியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது மனைவியை கிண்டல் செய்தவர்களை கணவன் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் முக்கூடல் அடுத்துள்ள ஓசுளுக்கப்பட்டி பகுதியை சேர்ந்தவர் எடிசன். மும்பையில் வேலை பார்த்து வந்த எடிசன் விடுமுறைக்காக சொந்த ஊரான ஓசுளுக்கப்பட்டிக்கு வந்துள்ளார். அப்பொழுது தனது நண்பர்களுடன் எடிசன் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். அப்பொழுது அவருக்கு எதிரே உள்ள டேபிளில் செண்பகம் என்பவர் தனது மனைவியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது எடிசன் மற்றும் அவரது நண்பர்கள் செண்பகத்தின் மனைவியை கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த செண்பகம் மிரட்ட, செண்பகத்திற்கும் எடிசனுக்கும் இடையே வாய்ததகராறு ஏற்பட்டு ஒருகட்டத்தில் செண்பகம் எடிசனை சரமாரியாக தாக்கினார். இந்த காட்சிகள் ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. ஹோட்டல் ஊழியர்கள் இருதரப்பையும் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பிய நிலையில், எடிசனின் வீட்டுக்குச் சென்ற செண்பகத்தின் அண்ணன் கட்டகணேசன் என்பவர் எடிசனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் எடிசனுக்கு கை மற்றும் காலில் வெட்டு விழுந்தது. உடனடியாக எடிசன் முக்கூடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT