திமுக தலைவர் கலைஞர் படித்த பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.
திருவாரூரில் திமுக தலைவர் கருணநிதி படித்த பள்ளியான வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலைஞர் மறைவையொட்டி ஆசிரியர்கள், மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் முதலில் கலைஞரின் திருவுரு படத்திற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ADVERTISEMENT
தொடர்ந்து மாணவர்கள் முன்னிலையில் பள்ளி தாளாளர் வடுகநாதன் கலைஞர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மெளன அஞ்சலி செலுத்தினர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments