Skip to main content

மணல் கடத்தலில் ஈடுபடும் மைனர் சிறுவர்கள்! 

Published on 25/05/2020 | Edited on 25/05/2020

 

sand

 

கரோனோ ஊரடங்கிலும் திருச்சி மாவட்ட புறநகர் பகுதிகளான காவிரி, கொள்ளிடம் ஆற்றங்கரையை ஒட்டிய கிராமங்களில் மணல் கொள்ளை படுஜோராக நடந்து வருகிறது. இந்த மணல் கொள்ளைக்கு அந்தக் கிராம பள்ளிச் சிறுவர்களைப் பயன்படுத்தி வருகிறார்கள் மணல் கொள்ளையர்கள்.
 


திருச்சி கொள்ளிடம் நொச்சியம், வாத்தலை, முசிறி வரையிலான ஆற்றங்கரை ஒட்டிய கிராமங்களில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை படுஜோராக நடந்து வருகிறது. இதில் மணல் திருடும் கும்பல் முழுவதுமாகப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்குப் பண ஆசை காட்டி அழைத்துக்கொண்டு செல்கிறார்கள்.

 

இந்தக் கரோனோ ஊரடங்கு பிரச்சனையில் பணத்தட்டுப்பாடு உள்ள இந்த நேரத்தில் இந்த மணல் கொள்ளைக் கும்பல் இவர்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

 

இந்தச் சிறுவர்களை, பாக்கெட் சாராயம், கஞ்சா, மணல் கடத்தல் எனச் சமூக விரோத செயல்களில் ஈடுபடுத்தி வருகின்றனர். இதன் மூலம் கையில் பணம் வந்தவுடன் இளசுகள் போதையைத் தேடி அலைகின்றனர்.
 


சமீபத்தில் வாத்தலை காவல் நிலைய ஆய்வாளர் ஜெயசித்ரா மணல் திருட்டு, போதைப் பொருட்கள் போன்றவற்றில் தொடர்புடைய இளம் சிறுவர்களைப் பிடித்து பனிஷ்மென்ட் ஆக காலை மாலை இரண்டு வேளையும் காவல் நிலையம் வந்து கையெழுத்து விடும் படி சொன்னதுடன் தலை முடிகளை சரியாக வைத்துக்கொள்ளாத இளசுகளுக்கு முடிவெட்டி அனுப்பி வைத்தார்.

 

இந்த ஊரடங்கில் பள்ளிகள் விடுமுறையில் இருப்பதால் பாடங்களை மறந்த தங்கள் குழந்தைகள் இந்தச் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதைக் கண்ட வீட்டில் உள்ள பெற்றோர்களும் அவர்களைக் கண்டிக்க முடியாமல் தவிக்கின்றனர். 
 

மேலும் முசிறி வாத்தலை கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சிறுவர்களை ஈடுபடுத்தி மணல் கொள்ளை நடப்பதைத் தடுக்க காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்தச் சிறுவர்களின் பெற்றோர்களின் விருப்பமாக உள்ளது.  
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.