ADVERTISEMENT

சேலம்: 1438 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஒடிசா மாநிலத்திற்கு அனுப்பி வைப்பு!

06:33 AM May 26, 2020 | rajavel

ADVERTISEMENT


ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 1438 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சேலத்தில் இருந்து சொந்த மாநிலத்திற்கு வழியனுப்பி வைக்கப்பட்டனர்.

ADVERTISEMENT


இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் தமிழகத்தில் குடும்பத்துடன் தங்கி கட்டுமானம், ஜவுளித்துறை, சுரங்கம், உணவகங்கள், கோழிப்பண்ணை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலை செய்து வருகின்றனர்.


கரோனா ஊரடங்கால் பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதனால், புலம் பெயர்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள் அவரவர் மாநிலத்திற்குத் திரும்ப முடியாத நிலை இருந்து வந்தது. ஆனால், தற்போது சொந்த மாநிலத்திற்குச் செல்ல விரும்பும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க சிறப்பு ரயில்களை நடுவண் அரசு இயக்கி வருகிறது.


இதையடுத்து கடந்த ஒரு சில நாள்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சுய விருப்பத்தின் பேரில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.


சேலம் மாவட்டத்தில் பணியாற்றி வந்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.


இதற்கிடையே, சேலம் மாவட்டத்தில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புவோர் குறித்த பட்டியல் சேகரிக்கப்பட்டது. அதன்படி, இம்மாவட்டத்தில் பணியாற்றி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 773 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் திங்களன்று (மே 25) ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக அவர்களுக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. நோய்த்தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பிறகு அவர்களுக்கு உரிய மருத்துவச் சான்றிதழும் வழங்கப்பட்டது.


சேலம் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி, திருப்பூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களையும் அவர்களின் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கும் பொருட்டு, சேலம் சி.எஸ்.ஐ. இம்மானுவேல் அரங்கம், சாரதா மகளிர் கல்லூரி, சவுடேஸ்வரி கல்லூரி ஆகிய மூன்று இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். அதற்கான ஏற்பாடுகளையும் சேலம் மாவட்ட நிர்வாகம் விரிவாகச் செய்திருந்தது.


ஒடிசா மாநிலத்தில் இருந்து வந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தங்கி பணியாற்றி வந்த 24 பேர், திருப்பூரில் வேலை செய்து வந்த 3 பேர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணியாற்றி வந்தந் 296 பேர், வேலூர் மாவட்டத்தில் வேலை செய்து வந்த 229 பேர், திருப்பத்தூரில் பணியாற்றி வந்த 113 பேர், சேலத்தில் பணியாற்றி வந்த 773 பேர் என மொத்தம் 1438 புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் சிறப்பு ரயில் மூலம் சேலம் சூரமங்கலம் ரயில் நிலையத்தில் இருந்து அவர்களின் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு பேருந்து வசதி, உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை சேலம் மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது.


சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், வருவாய் அலுவலர் திவாகர், சேலம் கோட்டாட்சியர் மாறன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் நிர்மல்சன் உள்ளிட்டோர் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.


இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறுகையில், ''புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, சுய விருப்பத்தின்பேரில் அவரவர் சொந்த மாநிலத்திற்குச் செல்வதற்கான ரயில் போக்குவரத்து கட்டணம் உள்ளிட்ட அனைத்து பயணச் செலவுகளையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும்.


ஆகவே, வெளிமாநிலத் தொழிலாளர்கள் தன்னிச்சையாக நடைபயணமாகவோ, பிற வாகனங்களின் மூலமாகவோ செல்வதைத் தவிர்க்க வேண்டும். உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் வரை வெளிமாநிலத் தொழிலாளர்கள் தற்போதுள்ள முகாம்களிலேயே தங்கியிருக்க வேண்டும்,'' என்றார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT