ADVERTISEMENT

சிறுமி ஆணவக் கொலையா? சேலம் அருகே பயங்கரம்! 

12:40 PM Sep 27, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலம் அருகே, 17 வயது சிறுமியை பெற்றோரே ஆணவக்கொலை செய்து விட்டதாகக் கூறி, அவளுடைய காதலனின் உறவினர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள பெரிய கவுண்டாபுரத்தைச் சேர்ந்தவர் அறிவழகன். இவருடைய மனைவி சேமலா (36). இவர்களுடைய 17 வயது மகள், ஒன்பதாம் வகுப்புடன் படிப்பை முடித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சம்பத் (27) என்பவரும் சிறுமியும் காதலித்து வந்தனர். செப். 19ம் தேதி, சிறுமியிடம் திருமண ஆசை காட்டி அவரை சேலத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சம்பத் அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால், சம்பத் தன் மகளை மயக்கிக் கடத்திச்சென்று ஆபாசமாக நடந்து கொண்டதாக சிறுமியின் பெற்றோர், காரிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை மீட்டனர். சம்பத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இது ஒருபுறம் இருக்க, சிறுமிக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க அவருடைய பெற்றோர் தீவிரமாக ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். அதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்ததோடு, சம்பத்தை தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் கூறி இருக்கிறார். இந்நிலையில், சிறுமியின் தாயார் சேமலா, செப். 25ம் தேதி இரவு, அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அன்று இரவு சேமலாவின் கணவர் அறிவழகனும் மருத்துவமனையிலேயே தங்கியிருக்கிறார். திங்கள்கிழமை (செப். 26) காலை வீட்டிற்கு வந்த அறிவழகன் வீட்டில் சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கூறி சடலத்தைப் பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர்.

அப்போது, சிறுமியின் காதலனான சம்பத்தின் உறவினர்கள், அந்த பகுதி பொதுமக்கள் ஆகியோர் திடீரென்று சடலத்தை ஏற்றிச்செல்ல வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறுமிக்கு விருப்பம் இல்லாத இடத்தில் அவளை திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அதற்கு அவள் சம்மதிக்காததால் மகள் என்றும் பாராமல் பெற்றோரே ஆணவக் கொலை செய்துவிட்டு, தாயாரும் தற்கொலை நாடகம் ஆடுகிறார் என்று குற்றம் சாட்டினர்.

இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் புறநகர் டி.எஸ்.பி ஸ்வேதா தலைமையில் காவல்துறையினர் நிகழ்விடம் சென்று, பொதுமக்களை சமாதானப்படுத்தினர். சிறுமியின் உடற்கூராய்வு செய்த பிறகு அவள் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டரா? என்பது தெரியவரும். அதன்படி தீவிர விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்ததை அடுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT