பிடிபட்ட இருவருமே கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் ரப்பர் தோட்டங்களில் கூலி வேலை செய்து வந்துள்ளனர். ஆரம்பத்தில் விடுமுறை நாள்களில், போதைக்காக கஞ்சா அடித்து வந்துள்ளனர். நாளடைவில், கஞ்சாவை வாங்கி விற்றால் கூடுதல் பணம் கிடைக்கும் என்பதை அறிந்து கொண்ட அவர்கள், மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து, உள்ளூரில் சில்லரை விலையில் விற்பனை செய்து வந்திருப்பது தெரிய வந்துள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை கிலோ 5000 ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். அங்கிருந்து ரயில் மூலம் சேலம் வந்த அவர்கள், பேருந்து மூலம் மதுரை சென்று, அங்கிருந்து கேரளாவுக்குச் சென்று தமிழ்நாடு- கேரளா எல்லையோர பகுதிகளில் கஞ்சா விற்க திட்டமிட்டு இருந்ததாக ராஜன் தெரிவித்துள்ளார். இவர்தான், ஷியாம்குமாரை ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து கொடுத்தால் 15 ஆயிரம் ரூபாய் கூலி கொடுப்பதாகச் சொல்லி அழைத்துச் சென்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து ராஜன், ஷியாம்குமார் ஆகிய இருவரையும் கைது செய்த போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர், நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.