ADVERTISEMENT

சேலம் மாநகராட்சி ஆணையர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்! பியூஷ் மனுஷ் புகார்

04:01 PM Jul 27, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக பழமையான மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக அதற்கு அனுமதி அளித்த மாநகராட்சி ஆணையாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டடும் என்று சேலம் மாநகர காவல்துறை ஆணையரிடம் சூழலியல் செயல்பாட்டாளர் பியூஷ் மனுஷ் புகார் அளித்துள்ளார்.

ADVERTISEMENT

மரங்கள் வெட்டப்பட்ட பிறகு அதற்கான கடிதத்தினை மாநகராட்சி ஆணையாளர் வழங்கியுள்ளதாகவும் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். எனவே, மரங்கள் வெட்ட சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், இதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT