ADVERTISEMENT
ADVERTISEMENT
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் பாதை அமைப்பின் தலைவரும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சகாயம், "புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு. மத்திய அரசின் வேளாண் சட்டத்தில் நம்பிக்கை இல்லாததே விவசாயிகள் போராட காரணம். தேர்தல் நேரத்தில் தவறிழைக்கும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தூய்மையான அரசியல்வாதிகள் இல்லை. நல்லவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு மக்கள் பிரதிநிதிகளை இளைஞர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்" என்றார்.
Show comments