ADVERTISEMENT
டாஸ்மாக் கடையின் சுவரைத் துளையிட்டு மதுபாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ADVERTISEMENT
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மாமண்டூரில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் சுவரைத் துளையிட்டு, உள்ளிருந்த மதுபாட்டில்களைத் திருடிச் சென்றனர். மேலும் டாஸ்மாக் கடையின் முன்பிருந்த சிசிடிவி காட்சிகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக யூஸ் அண்ட் த்ரோ டம்ளர் மூலம் சிசிடிவி கேமராவை மூடி மறைத்துவிட்டு இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் சோதனை நடத்தி, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Show comments