Skip to main content

நக்கீரன் செய்தி எதிரொலி... மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் எஸ்.ஐ கைது!

Published on 25/06/2021 | Edited on 25/06/2021

 

Police SI arrested for miss behave a student at gunpoint!

 

நக்கீரன் செய்தி எதிரொலியாக சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் எஸ்.ஐ. கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

 

அண்மைக்காலமாகவே பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக ஆசிரியர்கள் மீது மாணவிகள்,  முன்னாள் மாணவிகள் ஆகியோர் குற்றச்சாட்டுகளை வைத்துவரும் நிலையில், அது தொடர்பாக ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுவருகின்றனர். 

 

இந்நிலையில், காவல்துறையைச் சேர்ந்த எஸ்.ஐயே மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை மாதாவரம் பால்பண்ணை பகுதிக்கு கரோனா பாதுகாப்புப் பணிக்காக வந்த எஸ்.ஐ. சதீஷ்குமாருக்கும், அதே பகுதியில் உள்ள அருள் நகர் நியாயவிலைக் கடையில் பணிபுரிந்த ரேவதிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. காலப்போக்கில் அது காதலாக மாறி, இருவரும் ஒருவருட காலமாக சந்தோஷமாக இருந்துவந்துள்ளனர். வழக்கம்போல மணலியின் பெரிய சேகாடு பகுதியில் அமைந்துள்ள ரேவதியின் சொந்த வீட்டில் இருவரும் தனிமையில் இருந்ததை, பள்ளிக்குச் சென்றுவந்த ரேவதியின் மகள் பார்த்து ஆத்திரத்தில் அதிர்ந்துபோய், "இதை நான் அப்பாவிடம் சொல்லாமல் விடமாட்டேன்" என்று சொல்லியுள்ளார். அதற்கு எஸ்.ஐ. சதீஷ் குமார், "இதைப் பற்றி உன் அப்பாவிடம் நீ சொன்னால், உன் அப்பாவும் உன் தம்பியும் உயிரோடு இருக்க மாட்டாங்க" என்று மிரட்டியுள்ளார்.

 

ரேவதியின் மகள் அந்தப் பயத்தில் எதையுமே தன் அப்பாவிடம் சொல்லாமல் மறைத்துவந்துள்ளார். இதிலிருந்து வழக்கம்போல வீட்டிற்கு வருவதும் போவதுமாய் இருந்துள்ளார் சதீஷ். அதுவரையிலும் ரேவதியின் மீது மட்டுமே இருந்து பார்வை, திடீரென ரேவதியின் மகளின் பக்கம் திசை திரும்பி, ரேவதியிடமே "உனக்கு தற்போது இருக்கும் வசதியைவிட இன்னும் உச்சத்திற்குக் கொண்டு செல்கிறேன். ஆனால் நீ எனக்கு ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும்" என்று கேட்டுவிட்டு, "உன் மகளை எனக்குப் பிடித்துள்ளது. அவளுடைய அனைத்து தேவைகளையும் நான் பார்த்துக்கொள்கிறேன். நீ சரி என்று சொன்னால் மட்டும் போதும்" என்றதும், ரேவதியும் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இசைவு கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சதீஷ் தன் ஆட்டத்தை ஆரம்பித்து, ரேவதி மகளின் பிறந்தநாளுக்கு இரவு 12 மணிக்கு கேக் வாங்கிவந்து கேக் வெட்டச் சொல்லவே, ரேவதியின் கணவர் “இதுபோன்று தேவையில்லாத வேலையெல்லாம் செய்ய வேண்டாம். நான் ஏற்கனவே உன்னிடம் சொல்லியுள்ளேன். பெண் பிள்ளை இருக்கும் இடத்தில் இதுபோன்று வருவதை நிறுத்திகொள்ள வேண்டும்” என்று சண்டை போட்டுள்ளார். 

 

Police SI arrested for miss behave a student at gunpoint!

 

இதனைத் தொடர்ந்து அடுத்த மாதமே அந்தக் குழந்தைக்கு ஒரு கிஃப்ட் கொடுப்பதாகக் கூறி ‘ஐ போன்’ வாங்கிக் கொடுத்துள்ளார். அதை அந்தக் குழந்தை வாங்க மறுத்துள்ளது. அதையும் ரேவதி வாங்கிவைத்துக்கொண்டு "நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்க போங்க" என்று சொல்லவே சதீஷூம் சென்றுள்ளான். அதன் பிறகு, "நான் உன் மகளுடன் தனியாகச் செல்ல வேண்டும்" என்று கேட்டுள்ளான். அதற்காக ரேவதியிடம் ரூ. 1 லட்சம் பணத்தைச் செலவிற்கு வைத்துக்கொள் என்று கொடுத்துள்ளான். இதனைத் தொடர்ந்து அந்தப் பணத்தை ரேவதியும், ரேவதியின் பெரியம்மாவும் ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக்கொண்டு, சதீஷுடன் செல்ல ரேவதியின் மகளை வற்புறுத்தியுள்ளனர். 

 

மறுநாள் சதீஷ் வீட்டிற்கு வந்துள்ளான். "போ… போ" என்று ரேவதியும், ரேவதியின் பெரியம்மாவும் வற்புறுத்தவே, கோபமடைந்த ரேவதியின் மகள் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தன்னுடைய அப்பாவிடம் சொல்லியுள்ளார். உடனடியாக வீட்டிற்கு வந்த சிறுமியின் தந்தைக்கும் ரேவதிக்கும் பிரச்சனை முற்றி, ரேவதியை வீட்டிலிருந்து வெளியேற்றியுள்ளார். இந்த நிலையில் இது தொடர்பாகச் சிறுமியின் தந்தை கூறுகையில், "காவல் நிலையத்தில் இது தொடர்பாகப் புகார் கொடுக்கச் சென்றபோது, 'வழக்கு கொடுத்துவிட்டு நீயும், உன் மகளும், மகனும் உயிரோடு இருந்துவிடுவீர்களா?' என்று மிரட்டினான்.  எங்கு என் குழந்தையை ஏதாவது செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் நான் புகார் கொடுக்காமல், என்னுடைய குழந்தைகளுக்காக வாழ வேண்டும் என்று வந்துவிட்டேன்.

 

அதன் பிறகு நக்கீரன் ஆசிரியர் பேசிய வீடியோவைப் பார்த்துவிட்டு, இதுபோன்ற காவலர்களை விடக்கூடாது. என்னுடைய குழந்தைக்கு நடந்ததுபோல வேறு எந்தக் குழந்தைக்கும் நடந்துவிடக்கூடாது என்றுதான் நக்கீரனிடம் வந்தேன்” என்றார். இது தொடர்பாகப் பேசிய ரேவதியின் மகள், “தொடர்ந்து எனக்குப் பாலியல் தொல்லை கொடுத்துவந்தார். அதற்கு என்னுடைய அம்மாவும் உடந்தையாக இருந்தாங்க. இதைக் கேட்ட என்னுடைய அப்பாவைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் கொடுத்தாங்க” என்று கதறி அழுதார். தற்போது காசிமேடு காவல் நிலையத்தில் பணிபுரியும் எஸ்.ஐ. சதீஷ்குமாரிடம் இதுகுறித்து கேட்டபோது பேச மறுத்துவிட்டார்.  

 

இது தொடர்பாக நக்கீரனில் செய்தி வெளியாகியிருந்த நிலையில், சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாதவரம் எஸ்.ஐ. சதீஷ் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். தற்போது  எஸ்.ஐ  சதீஷை மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பாலியல் துன்புறுத்தலுக்கு உதவியாக இருந்த சிறுமியின் தாய் மற்றும் சிறுமியின் பெரியம்மா இருவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கரும்பு விவசாயி’ சின்னம் பெற்ற வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Rejection of the nomination of the candidate with the sugarcane farmer symbol

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இதற்கிடையே தேர்தல் சின்னம் தொடர்பான குழப்பம் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்டது. அதாவது கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த ‘கரும்பு விவசாயி’ சின்னம் இந்த தேர்தலில் கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் அக்கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் தேர்தல் ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் வழங்கப்பட்டது.

Rejection of the nomination of the candidate with the sugarcane farmer symbol

இத்தகைய சூழலில் திருவள்ளுர் நாடாளுமன்ற தொகுதிக்கு பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி சார்பில் கந்தன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி சார்பில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்த கந்தனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில் சுயேட்சை என்றும் சில இடங்களில் பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் சுட்டிக்காட்டி கந்தனின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட திருவள்ளூர்  மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பிரபு சங்கர் கரும்பு விவசாயி சின்னம் பெற்ற கட்சியின் வேட்பாளர் கந்தனின் வேட்பு மனுவை நிராகரித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். 

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது