ADVERTISEMENT

நதிநீர் பங்கீடு- கேரளாவுடன் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை!

05:08 PM Sep 17, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு- கேரளா இடையே நதிநீர் பங்கீடு தொடர்பாக மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (17/09/2021) மாலை 04.00 மணிக்கு தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாடு அரசின் சார்பில் பொதுப்பணித்துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பப் பிரிவு தலைவர் சுப்பிரமணியன் பங்கேற்றுள்ளனர். ஆனைமலையாறு- நல்லாறு அணைத் திட்டம், பாண்டியாறு- புன்னம்புழா திட்டத்தில் நீர் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கூறுகின்றன.

அதேபோல், கோவை மாவட்டத்தில் உள்ள சிறுவாணி அணை தொடர்பாகவும் இரு மாநில அரசின் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT