ADVERTISEMENT

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வால் மக்களுக்குப் பாதிப்பு இல்லை - பாஜக அண்ணாமலை கருத்து!

06:44 PM Dec 22, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT


பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வால் மக்களுக்குப் பாதிப்பு இல்லை என்று பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை இன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற 'விவசாயிகளின் நண்பன்' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அதில், "தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் லஞ்சம் அதிகமாகக் காணப்படுகிறது. தாசில்தார் அலுவலகங்களில் அதிக அளவில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. பிறப்புச் சான்றிதழ் முதல் இறப்புச் சான்றிதழ் வரை, இது புரையோடி இருப்பதாக" அவர் தெரிவித்தார்.

மேலும் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், அரசின் வருமானத்துக்காகத்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுகிறது. இதனால் மக்களுக்குப் பாதிப்பில்லை என்று தெரிவித்தார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT