ADVERTISEMENT

மாணவர்கள் சேர்க்கையை மறுக்கும் தனியார்ப் பள்ளிகள்; அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

10:31 AM May 05, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முத்து என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு ஒன்றில், "கடந்த 2009ம் ஆண்டு இயற்றப்பட்ட கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, அனைத்து தனியார்ப் பள்ளிகளும் மாணவர் சேர்க்கையில் உள்ள மொத்த இடங்களில் 25 சதவீத இடங்களில் பின்தங்கிய குழந்தைகளுக்கு மாணவர் சேர்க்கை வழங்க வேண்டும். இந்த சட்டத்தில் குறிப்பிட்ட தனியார்ப் பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிப்பதாக கூறி பல குழந்தைகளின் விண்ணப்பங்களைத் தனியார்ப் பள்ளிகள் நிராகரிக்கின்றன. ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிக்கும் குழந்தைகள், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் இயலாத நிலையே இருந்து வருகிறது" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கானது நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா மற்றும் சி. சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், "ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் குழந்தைகள் யாரும் விண்ணப்பிக்கவில்லை என்றால் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிக்கும் குழந்தைகளுக்கு மாணவர் சேர்க்கை வழங்க வலியுறுத்தி கடந்த 2017 இல் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டது. இருப்பினும் அதனடிப்படையில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் குழந்தைகள் எவரும் விண்ணப்பிக்காவிட்டாலும், அருகில் உள்ள பகுதி குழந்தைகளுக்கு மாணவர் சேர்க்கை வழங்கப்படுவதில்லை. எனவே, ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிக்கும் குழந்தைகளும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறினர்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில் "கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் ஏதேனும் விதிமீறல் இருந்தால் அதிகாரிகளுக்கு புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார் . இதனை கேட்டறிந்த நீதிபதிகள் இந்த மனுவுக்கு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மே மூன்றாவது வாரத்தில் ஒத்தி வைத்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT