இந்தியாவின் 71 வது குடியரசு தினம் இன்று நாடு முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இன்று வ ஊ சி பூங்காவில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமை தாங்கி கொடி ஏற்றி வைத்தார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதில் சுதந்திர போராட்ட தியாகிகள் அவர்களின் வாரிசுகள் கௌரவிக்கப்பட்டனர். பள்ளி மாணவ மாணவியர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. அரசு சார்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Show comments