ADVERTISEMENT

தேவைப்பட்டால் மீண்டும் வைகோவுடன் இணைந்து செயல்பட தயார்! - நாஞ்சில் சம்பத்

07:50 AM Jun 06, 2018 | Anonymous (not verified)


தேவைப்பட்டால் மீண்டும் வைகோவுடன் இணைந்து செயல்பட தயார் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் பிதாமகன், கதாநாயகன் வைகோதான் என்று புகழாரம் சூட்டிய அவர், தேவைப்பட்டால் மக்களுக்காக வைகோவுடன் இணைந்து போராட தயார் என்றார்.

முன்னதாக, நாஞ்சில் சம்பத் தனது டிவிட்டர் பதிவில்,

மக்கள் மன்றத்திலும் நீதி மன்றத்திலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இப்பொழுது நீதிமன்றத்தின் வாசலிலும் அரசாங்கத்தின் தாழ்வாரங்களிலும் தவம் கிடக்கிறது வேதாந்தா நிர்வாகம். இப்பொழுது மூடி இருப்பது இடைக்கால ஏற்பாடு.

இன்னொரு நாள் அது மூடப்படும் அப்போது ஸ்டெர்லைட் நாயகன் வைகோவிற்கு தூத்துக்குடி மக்களே விழா எடுப்பார்கள். குட்டிச்சுவர்கள் ஒருகாலமும் கோபுரம் ஆவதில்லை. குட்டை ஒருக்காலும் சமுத்திரம் ஆவதில்லை என்று அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது, தேவைப்பட்டால் மீண்டும் வைகோவுடன் இணைந்து செயல்பட தயார் என அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் மீண்டும் மதிமுகவில் இணைந்து செயலபடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT