n is a separate symbol to protect individuality' - vaiko interview

"தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வரும் சட்டமன்றத் தேர்தலில் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம்"என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Advertisment

இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, "கட்சியின் தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்ற முடிவோடு நாங்கள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாகச் சொல்லியிருக்கிறோம்"என்றார். மேலும், வருகின்ற சட்டமன்றத் தேர்தல் களத்தில், ரஜினிகாந்த் யாரையாவது ஆதரித்து கருத்துச் சொல்வாரா? அல்லதுஏதாவது ஒரு அணியை ஆதரிப்பாரா? எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு,"அனேகமாகயாருக்கும் ஆதரவு சொல்லமாட்டார் என நான் நினைக்கிறேன்'' என்றார்.