ADVERTISEMENT

மனிதாபிமானமற்ற மற்றும் சாதி காட்டுமிரண்டிகளால் இன்றுவரை இது முடிந்தபாடில்லை... -ஆணவ படுகொலைக்கு எதிராக இயக்குனர்கள்

06:15 PM Nov 17, 2018 | kamalkumar

ADVERTISEMENT

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள சூடைக் காந்த பள்ளி எனும் கிராமத்தைச் சேர்ந்த சுவாதியும், இளைஞர் நந்தீஸ் என்பவரும் காதலித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் இதற்கு பலத்த எதிர்ப்பு இருந்துள்ளது. இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு ஊரைவிட்டு சென்று இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர். திருப்பூரில் தங்களது வாழ்க்கையை நடத்திவந்த இருவரும் 13.11.2018 அன்று கர்நாடகா, மாண்டியா பகுதியில் பிணமாக கரை ஒதுங்கினர். உடலை கைப்பற்றிய காவல்துறையினர் அவர்கள் அந்த தம்பதியினர்தான் என்பதை உறுதிபடுத்தினர். பிணக்கூறாய்வில் இருவரும் அடித்துக் கொல்லப்பட்டிருப்பதும், சுவாதி மூன்றுமாதக் கர்ப்பிணி என்பதும் தெரியவந்துள்ளது.



இதற்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். இயக்குநர் பா.ரஞ்சித், இனியாவது ஆணவ படுகொலைக்கு எதிராக சட்டத்தை இயற்றவேண்டும் என்பதை குறிக்கும் வகையில், தமிழக அரசே உடனடியாக, ஆணவ படுகொலைக்கு எதிராக தனிசட்டத்தை ஆவணப்படுத்து!!



இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இது கொடுமையானது, முன்பு ராஜலட்சுமி இப்போது நந்தீஸ், சுவாதி. பல தசாப்தங்களாக இது தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது, மனிதாபிமானமற்ற மற்றும் சாதி காட்டுமிரண்டிகளால் இன்றுவரை இது முடிந்தபாடில்லை. ஆனால் இதற்கு ஒரு முடிவு தேவை, நாம் அதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். சாதிக்கொடுமை கண்டிப்பாக முடிந்தே ஆகவேண்டும். எனக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT