ADVERTISEMENT

ராமேஸ்வரத்தில் சிதம்பரம் தீட்சிதர்!

08:28 PM Dec 10, 2019 | santhoshb@nakk…

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவையடுத்து சிதம்பரம் தீட்சிதர் தர்ஷன் ராமேஸ்வரம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டார்.

ADVERTISEMENT

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 16- ம் தேதி இரவு முக்குருணி விநாயகர் சன்னதியில் அர்ச்சனை செய்ய கோரிய பெண்ணை தீட்சிதர் தாக்கிய சம்பவம் இணைய தளங்களில் வைரலாக பரவியது.

ADVERTISEMENT

இது தொடர்பாக தீட்சிதர் மீது சிதம்பரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இதனையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் பெற்ற நிலையில் ராமேஸ்வரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 15 தினங்கள் கையெழுத்திட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து இன்று (10.12.2019) இரண்டாவது நாளாக சிதம்பரம் தீர்ஷதர் தர்ஷன் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு சென்றார்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT