ADVERTISEMENT

செய்தியாளர் மருத்துவச் செலவுக்கு ராஜேந்திர பாலாஜி ரூ. 2 லட்சம் நிதி!

11:24 AM Jan 27, 2024 | tarivazhagan

திருப்பூர் மாவட்டம் – பல்லடம் தாலுகாவில் தனியார் டிவி செய்தியாளராகப் பணியாற்றி வருபவர் நேசபிரபு. இவர், கடந்த வியாழன் இரவு மர்ம நபர்களால் வெட்டப்பட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும், பத்திரிக்கையாளர் சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றன. அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி டிவி செய்தியாளர் நேசபிரபு மருத்துவச் செலவுக்கான ரூ.2 லட்சத்தை விருதுநகர் மாவட்ட டிவி செய்தியாளர் ஜெய்லானியிடம் கொடுத்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT