ADVERTISEMENT

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மழை...

04:22 PM Apr 20, 2019 | kamalkumar

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது.

ADVERTISEMENT


இதனால் தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சில இடங்களில் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், நாளை மறுநாள் முதல் 24ம் தேதி வரையிலும் தமிழ்நாட்டில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை தெரிவித்தது. தற்போது கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் மழையும், சேலம் மற்றும் சிவகங்கையில் பலத்த காற்றுடன் கூடிய மழையும் பெய்துவருகிறது. இதனால் மக்கள் வெயிலின் தாக்கம் குறைந்து மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT