ADVERTISEMENT

குடை முக்கியம்... 3 நாட்களுக்கு மழை நிச்சயம் - வானிலை மையம் அறிவிப்பு!

06:10 PM Aug 20, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் திசை வேக மாறுபாடு அதிகரிக்கும்போது மழைப்பொழிவுக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT