ADVERTISEMENT

அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழை

04:25 PM Jan 07, 2024 | kalaimohan

தமிழ்நாட்டில் இன்று (07.01.2024) முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள வட கடலோர மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை (08.01.2024) முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாட்டின் தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வெளியான அறிவிப்பின்படி மயிலாடுதுறை, நாகை, திருவள்ளூர், திருவாரூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர், தஞ்சை, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, கோவை, நீலகிரி, தென்காசி ஆகிய 19 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT