இதனால் ரயில் பயணிகளுக்கு துரித சேவைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுகளாக கடலூர் துறைமுகத்தில் இருந்து திருவாரூர் வரை 114 கி.மீ தூரத்திற்கு ரயில் பாதையை மின் பாதையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வந்தது. இதன் பணிகள் முடிந்து கடந்த இரு நாட்களுக்கு முன் இந்த மின்தடத்தில் மின் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. மேலும் இந்த தடத்தில் விரைவில் மின்சார ரயில் இயக்கபடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் உள்ளிட்ட ரயில் பயணிகள் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து இயற்கை ஆர்வலரும், டைமிங்க் கெல்ப் தொண்டு நிறுவனத்தின் தலைவருமான வினோத்குமார் கூறுகையில், "ரயில்வே நிர்வாகம் ஒரு மரத்தை வெட்டுவதற்கு முன் மூன்று மரக்கன்றுகளை நட்டுவிட்டு மரங்களை வெட்டியிருக்க வேண்டும். அவர்கள் செய்தது தவறான நடவடிக்கை. ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டிவிட்டு இவர்கள் எப்படி சுற்றுசூழலை பாதுகாப்பார்கள் என்பதை ஒரு நிமிடம் சிந்தித்து பார்க்க வேண்டும். எனவே ரயில்வே நிர்வாகம் மரம் வெட்டுவதற்கு டெண்டர் விட்டு வெட்டியதை போல ரயில் பாதைகளுக்கு இடையூறு இல்லா இடங்களில் அதிகளவில் புதிய மரக்கன்றுகளை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்."