Skip to main content

சாலையோர மரத்தில் கார் மோதி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

Published on 29/07/2020 | Edited on 29/07/2020
ddddd

 

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள வேலவிநாயகர்குப்பத்தை சேர்ந்த வைரக்கண்ணு மகன் சண்முகம் (40). இவர் மரம் அறுக்கும் பிளேடு விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று தனது நண்பர்களான அதேபகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் தட்சிணாமூர்த்தி (40), விருப்பாட்சி கிராமத்தை சேர்ந்த சீசேசான் செந்தில் (45), வெள்ளக்கண்ணு மகன் இளங்கோவன் (40),  குறிஞ்சிப்பாடி ஆண்டி தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் கோதண்டராமன் (40) ஆகியோருடன் தனது காரில், கடலூர் முதுநகர் பகுதியிலுள்ள ஒரு மரப்பட்டறைக்கு சென்று மரம் அறுக்கும் பிளேடு புதுப்பித்து கொடுத்துவிட்டு தனது நண்பர்கள் நான்கு பேர்களுடனும் சண்முகம் தனது காரில் குறிஞ்சிப்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தார். 

 

காரை சண்முகம் ஓட்டினார். குள்ளஞ்சாவடி அடுத்த தோப்புக்கொல்லை அருகே மின்சார அலுவலகம் எதிரில் சாலையில் வந்து கொண்டிருந்தபோது கார் திடீரென்று சண்முகத்தின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் இருந்த பனை மரத்தின் மீது அதிவேகமாக மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த செந்தில், தட்சிணாமூர்த்தி,  இளங்கோ ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காரை ஓட்டி வந்த சண்முகம் மற்றும் கோதண்டராமன் இருவர் பலத்த காயங்களுடன்  உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்து சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள்,  பொதுமக்கள் இருவரையும் மீட்டு  கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

இதனிடையே இதுகுறித்து தகவலறிந்த குள்ளஞ்சாவடி காவல் காவல் ஆய்வாளர் சத்தியபாமா மற்றும் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் உயிரிழந்த மூன்று பேரின் உடல்களையும் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

 

மேலும் இது குறித்து தகவலறிந்த இறந்து போன மூன்று பேரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர். விபத்தில் மூன்று பேர் பலியான சம்பவம் குறிஞ்சிப்பாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.