Skip to main content

கீழடி அகழ்வாய்வு  திமுகவில் இருந்து துவங்கினால் தலைகுனிவு- பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து!

Published on 27/09/2019 | Edited on 27/09/2019

கோவை சாய்பாபாகாலனியில் பகுதியில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

காந்தியடிகளின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் பாஜக சார்பில் அக்டோபர் 2 முதல் மாதம் முழுவதும் பாதயாத்திரை நடைபெறும் என தெரிவித்தார். மேலும் இந்த பாதயாத்திரை உலகில் அதிக நபர்களை கொண்டு அதிக தூரம் கடந்த பாதயாத்திரையாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.

 

Radhakrishnan comment!

 

இடைத்தேர்தல்களில் பாஜக பிரச்சாரம் செய்வது குறித்த கேள்விக்கு, அகில இந்திய தலைமை முடிவு செய்யும் எனவும், தற்போது பாதயாத்திரையில் கவனம் செலுத்தி வருகிறோம் எனவும், தங்களை பொறுத்தவரை அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்கிறது எனவும், கூட்டணி குறித்து துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பதிலளிக்காது பற்றி அதிமுகதான் பதில்சொல்ல வேண்டும் என அவர் தெரிவித்தார்.

புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை மாநில தலைமைதான் முடிவெடுக்கும் எனவும், தான் கருத்து சொல்ல முடியாது எனவும் அவர் கூறினார். மேலும்தான் விசாரித்தவரை புதுச்சேரி இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெறுமென்பதே இப்போது உள்ள சூழ்நிலை என அவர் தெரிவித்தார்.

கீழடி அகழ்வாய்வு மூலம் வரலாறு தமிழகத்தில் இருந்து துவங்கும் என்பது மகிழ்ச்சி எனவும், ஆனால் அது திமுகவில் இருந்து துவங்கி விடக்கூடாது எனவும் கூறிய அவர், அப்படி நடந்தால் காலகாலத்திற்கும் தலைகுனிவாக மாறி விடுமென தெரிவித்தார்.

மோடி தமிழின் மீதும், தமிழர் மீதும் பற்று கொண்டவர் எனவும், கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட எந்த நாகரிகமாக இருந்தாலும் முழுமையாக ஆய்வு முடிவு வெளிவர மத்திய அரசு உறுதியாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்திருக்கிறது என்றால், மாநில அளவில் நடந்த தேர்வுகளில் எவ்வளவு தவறுகள் நடந்திருக்கும் என கேள்வி எழுப்பிய அவர்,

இந்த விவகாரத்தில் தமிழக அரசு கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்து குறித்த கேள்விக்கு, அதற்கு பயிற்சியை வழங்காமல் இருந்தால் சரி என கூறினார்.
 
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.