ADVERTISEMENT

'குவாட்டர், ஸ்கூட்டர், கை நிறைய பணம் 2,500 கொடுத்தும் வராத கூட்டம்... - கமல் பேச்சு!

09:50 PM Dec 20, 2020 | kalaimohan

ADVERTISEMENT

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்து இருக்கும் நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் காஞ்சிபுரத்தில் இரண்டாவது கட்ட தேர்தல் பரப்புரையை இன்று தொடங்கினார்.

ADVERTISEMENT

நான்கு நாட்களுக்கு 6 மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் நின்று மக்களிடம் பேசிய அவர், நல்லதை நினைக்கும் அனைவரும் எம்.ஜி.ஆரின் வாரிசுதான். எம்.ஜி.ஆரின் நீட்சிதான் நான். 2,500 ஆயிரம் கொடுத்தும் கூடாத கூட்டம் அன்பிற்காக கூடியுள்ளது. இதனைக் கண்டு அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். குவாட்டர், ஸ்கூட்டர் கை நிறைய பணம் 2,500 இத்தனையும் கொடுத்தும் வரலாம், வராமலும் போகலாம் என நினைக்கக்கூடிய கூட்டத்திற்கு எதிராக எத்தனை பேர் இங்கு கூடி இருக்கிறார்கள். இதுதான் அவர்களுக்கு பயம்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT