ADVERTISEMENT
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதிக்குட்பட்ட அன்னவாசல் ஒன்றியம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்கக் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடிநீரில் மனிதக் கழிவைக் கலந்தவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (19.01.2022) நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு கண்டன முழக்கமிட்டார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments